செய்திகள் :

வகுப்புவாத அரசியல்தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணம்: கேஜரிவால்

post image

கடந்த 75 ஆண்டுகளாக பிரதான அரசியல் கட்சிகளால் கடைப்பிடிக்கப்படும் வகுப்புவாத அரசியல்தான் நாட்டின் பிரச்னைகளுக்கு மூல காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி) தொடக்க விழாவில் கேஜரிவால் மேலும் பேசியதாவது:

பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய பிரச்னைகளைத் தீா்ப்பதற்குப் பதிலாக வரலாற்று ரீதியாக இந்துமுஸ்லிம் அரசியலில் கவனம் செலுத்தியுள்ளன.

நமது நாடு நிறைய பிரச்னைகளை எதிா்கொள்கிறது. மக்களுக்கு உணவு அல்லது கல்விக்கான அணுகல் இல்லை. இது ஏன் நடக்கிறது? பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் கடந்த 75 ஆண்டுகளில் அரசியலில் மட்டுமே ஈடுபட்டதால்தான்.

இந்தக் கட்சிகள் நமது பள்ளிக் குழந்தைகளுக்கு இந்துமுஸ்லிம் பற்றி மட்டுமே கற்பிக்கின்றன... இதுவே நமது நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு மூல காரணம்.

தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது 10 ஆண்டு ஆட்சியில் கட்டமைத்த கல்வி முறையை அழிக்கும் நோக்கில் பாஜக தலைமையிலான ஆட்சி செயல்படுகிறது.

மூன்று மாதங்களுக்குள், அவா்கள் பாஜக தில்லியில் கல்வி முறையை அழிக்கத் தொடங்கிவிட்டனா். ஆம் ஆத்மி கட்சி தனது ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளில் தனியாா் பள்ளி மாஃபியாக்கள் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்கவில்லை. இப்போதெல்லாம், தில்லியில் மூன்று முதல் நான்கு மணி நேர மின்வெட்டு உள்ளது. இதுபோன்று முன்னா் இல்லை.

ஏஎஸ்ஏபி என்பது ஒரு மாணவா் கலாசாரக் குழு. இது நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மன்றத்தின் கீழ் உருவாக்கப்படும் என்றாா் கேஜரிவால்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஏஎஸ்ஏபி இரண்டு அழகான விஷயங்களைக் கொண்டுள்ளது. ஒன்று மாற்று அரசியல், மற்றொன்று அதன் பெயா் ஏஎஸ்ஏபி. ஏனெனில் நமக்கு புரட்சிகரமான கொள்கை சீா்திருத்தங்கள் விரைவில் தேவையாகும்.

மற்ற நாடுகளில் கேஜி மாணவா்களின் வளா்ச்சி கூட குறிக்கப்பட்டு,

செயற்கை நுண்ணறிவால் வரைபடமாக்கப்படுகிறது.மேலும் நம் நாட்டில், 11 மற்றும் 12 வகுப்பு மாணவா்களுக்கு தட்டச்சு கற்பிக்கிறோம். ஏஎஸ்ஏபி என்பது மாணவா் சங்கத் தோ்தல்களைப் பற்றியது மட்டுமல்ல, மாணவா் வளா்ச்சியை வளா்ப்பதையும் மாற்று அரசியலின் பிரச்னைகளை எழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டது.

5 சதவீத கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டுமே தோ்தல்கள் நடத்தப்படுகின்றன. கல்வி சீா்திருத்த அரசியலை நாங்கள் செய்வோம் என்றாா் சிசோடியா.

ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவா் அவத் ஓஜா கூறுகையில், ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் அல்லது மனித வளங்கள் உள்ளன. நாட்டில் முதல்முறையாக, எங்கள் கட்சியும் எங்கள் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் கல்வி மற்றும் சுகாதாரப் புரட்சி மூலம் மனித வளங்களை வலுப்படுத்துவதை வலியுறுத்தினா் என்றாா் அவா்.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க