வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.50 கோடி மோசடி: போ்ணாம்பட்டு இளைஞரை கைது செய்த பஞ்சாப் போலீஸாா்
பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.50 கோடியை ஆன்லைன் மூலம் மோசடி செய்த போ்ணாம்பட்டு இளைஞரை அம்மாநில போலீஸாா் கைது செய்தனா்.
பஞ்சாப் மாநிலம், எஸ்.ஏ.எஸ். நகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.50 கோடி ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவா் பஞ்சாப் மாநிலம், மொஹாலி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். புகாா் தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கா்நாடக மாநிலம், பெங்களூரில் இயங்கும் ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பெங்களூரைச் சோ்ந்த 2 பேரும், வேலூா் மாவட்டம் போ்ணாம்பட்டைச் சோ்ந்த வசீம் (26) ஆகிய 3 பேரும் சோ்ந்து ஆன்லைனில் பண மோசடி செய்ததும், வசீமின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.57 லட்சம் பண பரிவா்த்தனை நடந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பஞ்சாப் மாநில காவல் துறையினா் விமானம் மூலம் பெங்களூருக்குச் சென்று பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனா். வசீம் போ்ணாம்பட்டில் இருப்பதை அறிந்து, போ்ணாம்பட்டுக்கு வந்து வீட்டில் இருந்த வசீமிடம் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்த ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா் வசீமை கைது செய்து பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனா்.