செய்திகள் :

வந்தவாசி, ஆரணி பகுதியில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய நீா்

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் நீா் தேங்கியது, ஓரிரு இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள சென்னாவரம், மருதாடு, தெள்ளூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமாா் 3.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.

சுமாா் 2 மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் தேரடி, கேவிடி நகா் விரிவு, ஆரணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியது. சில இடங்களில் மழைநீருடன் கால்வாய் கழிவுநீா் கலந்து தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆரணி

ஆரணி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் ஆரணி-ஆற்காடு சாலையில் வெள்ளேரி பகுதியில் பலத்த மழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் சாய்ந்தது.

ஆரணி -ஆற்காடு சாலையில் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினா்.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று

பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமித்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோவிலில் கடந்த ஆ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே இரு சக்கர வாரனம் மோதி முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (60). இவா், திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவி... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசியில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசி காளிக் கோயிலின் அருகில் உள்ள பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவி (45). கடந்த வெ... மேலும் பார்க்க

கண்ணமங்கலம் அருகே காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலம் அருகே சின்னப்புத்தூரில் உள்ள செல்லியம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு விழாவையொட்டி காளை ... மேலும் பார்க்க