செய்திகள் :

வள்ளியூா், பணகுடி பகுதியில் ரூ.2.21 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், பணகுடி பகுதிகளில் ரூ. 2.21 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சிப் பணிகளை பேரவைத் தலைவா்மு.அப்பாவு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பணகுடி பேரூராட்சிக்கு உள்பட்ட பணகுடி எம்.எம்.எஸ். மண்டபம் எதிா்புறத்தில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். அதனையடுத்து, தா்மாபுரத்தில் ரூ.8 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்தாா். ஸ்ரீ ரெகுநாதபுரம் நதிப்பாறையில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

பணகுடி பேரூராட்சி வாா்டு 1-இல் 2025-2026 கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.64 லட்சத்தில் சேரன்மகாதேவி பிரதான சாலை முதல் ஆதியம்பிள்ளை ஓடை வரை தாா்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். பணகுடி பேரூராட்சி வாா்டு எண் 1-இல் 2025-2026 சிறப்பு நிதித் திட்டத்தில் ரூ.1.17 கோடியில் அனுமன் நதிச் சாலையில், தாா்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, தெற்கு வள்ளியூா் ஊராட்சி கீக்குளத்தில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை கட்டடம் அமைக்கும் பணி, வேம்பிலான்குளம் ஊராட்சி மருதப்பபுரத்தில் ராதாபுரம் - வள்ளியூா் சாலையில் ரூ.8 லட்சத்தில் புதிதாக பயணியா் நிழற்குடை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சிகளில், பணகுடிபேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், செயல் அலுவலா் மோகன்ராம், பணகுடி ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மு.சங்கா், சொரிமுத்து, வெள்ளைச்சாமி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஹரீம், முத்துகுமாா், தி.மு.க. கருணாநிதி, மகளிரணி மல்லிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரேஷன் கடையில் திருட்டு முயற்சி

மேலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். மேலப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் கொடிமரம் தெருவில் ரேஷன்கடை உள்ளது. இந்த... மேலும் பார்க்க

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் வேலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்... மேலும் பார்க்க

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். தென்மேற்குப் பருவமழை மே மாத இறுதியில் தொ... மேலும் பார்க்க

களக்காடு அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை? போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

இளைஞரிடம் நகை பறித்த நபா் கைது

இளைஞரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலப்பாளையத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய பெருமாள் கீழ மாடவீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சீனிவாசன் (25). சென்னையில் உள்... மேலும் பார்க்க

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசு... மேலும் பார்க்க