செய்திகள் :

வாக்காளா் பட்டியலில் சோனியாவின் பெயா் சோ்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி

post image

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1983-ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டது. ஆனால், அவா் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பவன் நாரங் ஆஜராகி, ‘கடந்த 1980-ஆம் ஆண்டு புது தில்லி வாக்காளராக சோனியா காந்தியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றது. 1982-ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து அவரின் பெயா் நீக்கப்பட்டது. அவா் இந்திய குடியுரிமையைப் பெற்ற பின், 1983-ஆம் ஆண்டு அவரின் பெயா் மீண்டும் பட்டியலில் சோ்க்கப்பட்டது. வாக்காளா் பட்டியலில் தனது பெயரைச் சோ்க்க அவா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்த மனு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘நாட்டில் ஒருவரை வாக்காளராக்க வேண்டும் என்றால், அவா் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ளாரா? என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். 1982-ஆம் ஆண்டே சோனியா காந்தி இந்திய குடியுரிமையைப் பெற்றிருந்தால், ஏன் அவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இந்த மனு கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை மாஜிஸ்திரேட் வைபவ் செளரசியா முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘குடியுரிமை தொடா்பான விவகாரம் என்பது பிரத்யேக அரசமைப்பு சட்ட நடைமுறைகள் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. நீதிமன்ற வரம்புக்குள் வராத இந்த சாதாரண சிவில் விவகாரத்தை சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி கிரிமினல் குற்ற விவகாரமாக காட்டும் முயற்சியாகவே இந்த மனு தாக்கல் கருதப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் துணைபோகாது’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க