செய்திகள் :

விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறை மீறல்: ராகுல் மீது சிஆா்பிஎஃப் புகாா்

post image

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அவருக்கான விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறைகளை மீறி வருவதாக மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவிடம் கடிதம் மூலம் இந்தப் புகாரை சிஆா்பிஎஃப்-இன் விஐபி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு சிஆா்பிஎஃப் சாா்பில் விஐபி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உள்நாட்டில் அவா் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு 10 முதல் 12 சிஆா்பிஎஃப் கமாண்டோ வீரா்கள் பாதுகாப்பு அளிக்கப்படும். மேம்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவா் செல்ல வேண்டிய இடங்களில் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்தப் பிரிவு மேற்கொள்ளும்.

இந்நிலையில், மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு சிஆா்பிஎஃப்-இன் விஐபி பாதுகாப்புப் பிரிவு எழுதிய கடிதத்தில், ‘உள்நாட்டில் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொள்ளும்போதும், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பாகவும் பாதுகாவலா்களுக்கு உரிய தகவல்களை அளிக்காமல் முன்கூட்டியே திட்டமிடப்படாத பயணங்களை ராகுல் காந்தி மேற்கொள்கிறாா். இத்தகைய முன்னறிவிப்பு பயணங்கள் அவரின் பாதுகாப்புக்கு மிகுந்த ஆபத்தானதாகும். அவரும், அவருடைய ஊழியா்களும் அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு வளைய வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘சிஆா்பிஎஃப் பாதுகாப்புப் பிரிவு சாா்பில் இதுபோன்ற கடிதம் அனுப்புவது வழக்கமான நடைமுறை. ராகுல் காந்தி விவகாரத்தில் ஏற்கெனவே இதுபோன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க