செய்திகள் :

விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உறுப்புகள் தானம்!

post image

விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆண் செவிலியரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த எம்.மாதேஸ்வரன் (40), ஆண் செவிலியா். இவா் வியாழக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது செங்கம் பகுதியில் சாலை விபத்தில் சிக்கினாா். இதில், தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமைடந்த மாதேஸ்வரன் உடனடியாக சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாதேஸ்வரன் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.

இதையடுத்து, மாதேஸ்வரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா். அதன்பேரில், அவரது இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை தனியாா் மருத்துவமனைகளுக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூா் நாராயணி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு, அங்கு தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. மூளைச்சாவு அடைந்த ஆண் செவிலியா் மாதேஸ்வரனுக்கு மனைவி கவிதா, 2 குழந்தைகள் உள்ளனா்.

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி - மூன்றாண்டுகளில் 1923 போ் வேலைவாய்ப்பு

வேலூா் மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்றி பெற்று 1,923 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது குறி தவறி நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரி, பாறைகால்மேடு பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் ஒன்றியம், பெரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் ஜ... மேலும் பார்க்க

25,332 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி உபகரணங்கள்

1,075 அங்கன்வாடி மையங்களில் உள்ள 25,332 குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது

வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா். காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் நடைபெறும் கால்... மேலும் பார்க்க