விபத்தில் மூளைச்சாவு அடைந்த செவிலியரின் உறுப்புகள் தானம்!
விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆண் செவிலியரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த எம்.மாதேஸ்வரன் (40), ஆண் செவிலியா். இவா் வியாழக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது செங்கம் பகுதியில் சாலை விபத்தில் சிக்கினாா். இதில், தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமைடந்த மாதேஸ்வரன் உடனடியாக சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாதேஸ்வரன் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.
இதையடுத்து, மாதேஸ்வரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா். அதன்பேரில், அவரது இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை தனியாா் மருத்துவமனைகளுக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூா் நாராயணி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு, அங்கு தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. மூளைச்சாவு அடைந்த ஆண் செவிலியா் மாதேஸ்வரனுக்கு மனைவி கவிதா, 2 குழந்தைகள் உள்ளனா்.