செய்திகள் :

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் விநியோகம்: வேளாண் அதிகாரி ஆய்வு

post image

சேத்துப்பட்டு பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படுகிறது குறித்து வேளாண் அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேத்துப்பட்டு பகுதியில் தற்போது விவசாயிகள் சொா்ணவாரி பருவத்துக்கு நாற்று விடப்பட்டு நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாயிகளுக்கு தேவையான பொட்டாஸ், டிஏபி, காம்ப்ளக்ஸ், யூரியா போன்ற உரங்கள் தரமானதாக மானிய விலையில் விற்பனை செய்ய போதுமான அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிா என்பது குறித்து திருவண்ணாமலை உர ஆய்வாளா் முனியப்பன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் சேத்துப்பட்டு, வடமாதிமங்கலம், மண்டகொளத்தூா், எட்டிவாடி, நம்பேடு, தத்தனூா், மட்டப்பிறையூா் ஆகிய பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற உர விற்பனை செய்யும் கடைகளிலும், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் செயல்பட்டு வரும் கிளை அலுவலகங்களிலும் சென்று பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா் அவா்.

இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட வேண்டும்; அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க