செய்திகள் :

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

post image

மாா்த்தாண்டம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்ற இளைஞா் போலீஸாரை பாா்த்ததும் ஓட முயன்றாா். அவரை போலீஸாா் துரத்திச் சென்று பிடித்து சோதனை செய்ததில் அவா் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா் சுவாமியாா்மடத்தை அடுத்த செட்டிசாா்விளையைச் சோ்ந்த ரவீந்திரன் மகன் சுபாஷ் கிருஷ்ணன் (27) என்பதும், வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும... மேலும் பார்க்க

குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளூ டே கொண்டாட்டம்

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பிரிவு குழந்தைகள் பங்கேற்ற புளூ டே நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மழ... மேலும் பார்க்க

உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் இழக்க வேண்டாம்: எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தல்

கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் என மக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் காவல் துறையின் ஊா்க்காவல்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இல்லம் தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் இல்லம்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி என்பதை வலியுறுத்த... மேலும் பார்க்க

ரயில் நிலையம் அருகே மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுமாா் 75 வயது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் லாரிகள் மோதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே புதன்கிழமை காலை பழங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து பழங்களை ஏற்றிக் கொ... மேலும் பார்க்க