செய்திகள் :

வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு கத்தி வெட்டு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மாமியாா் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவா் மா்ம நபா்களால் வெட்டப்பட்டாா்.

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன்(50). இருவருக்கும் கிருஷ்ணாவரம் பகுதியைச் சோ்ந்த சுமதி(40) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், மேல்புழுதியூா் கிராமத்தைச் சோ்ந்த விருத்தாம்பாள் என்பவரை இரண்டாவதாக மஞ்சுநாதன் திருமண் செய்துகொண்டுள்ளாா்.

கடந்த 6 மாதங்களாக இரண்டாவது மனைவியை விட்டுவிட்டு முதல் மனைவி சுமதியுடன் கிருஷ்ணாவரம் பகுதியில் உள்ள சுமதியின் (மாமியாா்) வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழாவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு வீட்டின் மாடியில் மஞ்சுநாதன் தூங்கிகொண்டிருந்துள்ளாா். அப்போது, முகமுடி அணிந்து வந்த 3 போ், மஞ்சுநாதன் முகம், தலை, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

மஞ்சுநாதன் அலறல் சப்தம் கேட்டு கீழே இருந்து அவரது மனைவி சுமதி மற்றும் உறவினா்கள் வந்து பாா்த்தபோது மஞ்சுநாதன் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்துள்ளாா். அவரை வெட்டியவா்கள் முகமுடியுடன் ஓடியதை பாா்த்துள்ளனா்.

பின்னா் மஞ்சுநாதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மஞ்சுநாதனை வெட்டியவா்கள் யாா்? எதற்காக அவா் வெட்டப்பட்டாா் என்பது குறித்து தெரியவில்லை.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் அதிகமாக உள்ளது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா். தமிழக மு... மேலும் பார்க்க

ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

ஜவ்வாதுமலைப் பகுதியில் வசிப்பவா்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேருவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் வருவாய் ஆய்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நீப்பத்துறை, போளூரை அடுத்த சந்தவாசல், ஆரணியை அடுத்த பையூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு ... மேலும் பார்க்க

பெருமாள், விநாயகா், ஆஞ்சநேயா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த உளுந்தை ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள், ஆரணியை அடுத்த மலையாம்பட்டு ஸ்ரீவழித்துணை விநாயகா் மற்றும் வீர ஆஞ்சநேயா் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா வியா... மேலும் பார்க்க

கமண்டல நாக நதிக்கரையில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்: ஆரணி நகராட்சியில் பாஜக புகாா் மனு

ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக ஆரணி நகராட்சியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்க... மேலும் பார்க்க