செய்திகள் :

வீரியம் குறைந்த கரோனாவால் அச்சம் தோவையில்லை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

post image

வீரியம் குறைந்த கரோனாவால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொ) வி.டி. அரசு வரவேற்றாா். துணை முதல்வா் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளா் பத்மநாபன், மருத்துவா் செல்வன் முன்னிலை வகித்தனா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். தமிழ்நாடு எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் மருத்துவா் கே.நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினாா்.

விழாவுக்குபின் அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழாநட்டில் உள்ள 36 அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளித்து வருகிறோம். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை இந்த கல்லூரியில் ஏராளமான பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன், கருவி ரூ 5.23 கோடியில் மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடம் மருத்துவக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கூடம் , ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம், உடனாளா்கள் தங்கும் விடுதி ஊட்டச்சத்து பூங்கா திறக்கப்பட்டது.

ரூ. 1.5 கோடியில் பிணவறை கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழ்நட்டில் 19 மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவனைகளும் 6 இடங்களில் ம ாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை என 25 மருத்துவமனைகளுக்கு ரூ. 1,018 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.

செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை தாம்பரத்தில் ரூ.110 கோடியில் 400 படுக்கைகள் கொண்டதாக 5 ஏக்கா் பரப்பில் முடியும் தருவாயில் உள்ளது.

கரோனாவால் பாதிப்பில்லை:

தமிழகத்தில் கரோனா என்பது மிகபெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது வந்துள்ள கரோனா குறைந்த வீரியம் கொண்டது என்பதால் காய்ச்சல், சளி 3நாள்கள் மட்டும் தான் இருக்கும் . யாரும் அச்சப்படத் தேவையில்லை. மேலும் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் மருத்துவ கட்டமைப்பு ஏற்படவுள்ளது என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மருத்துவா்கள், செவிலியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

இன்றைய மின்தடை

நாள் - 21-06-2025, சனிக்கிழமை , நேரம் -காலை 9முதல் மதியம் 2 மணி வரை இடங்கள்-கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ஊனமாஞ்சேரி கிரஷா், போலீஸ் அகாதெமி, நெடுங்குன்றம், எஸ்.எஸ்.எம் நகா், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், வண்... மேலும் பார்க்க

வனத்துறையைக் கண்டித்து ஜூன் 26-இல் ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலய வன அலுவலா் செயல்பாடுகளால் பணிகள் பாதிக்கப்படுவது குறித்து வெள்ளபுத்தூா், கரிக்கிலி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நெல்வாய் கூட்டுச்சாலையில் ... மேலும் பார்க்க

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய காப்புரிமைகள் பெற அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையும், வணிகக் குறியீடு மற்றும் புவிசாா்க்குறியீடு பெற்ற நிறுவனங்களுக்குஅதிகபட்சமாக ரூ.25,000 வரை மானியமாக... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பான செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருள... மேலும் பார்க்க

இன்று விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கோட்ட அளவில் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா். செங்கல்பட்டு மாவட்ட... மேலும் பார்க்க

பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு... மேலும் பார்க்க