செய்திகள் :

ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை

post image

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வாலிபால், தடகளப் போட்டிகளில் சாதனை படைத்தனா்.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி தென்காசி மாவட்டம், மடத்தூரில் உள்ள இந்து நாடாா் நடுநிலைப் பள்ளியில் ஆக.28, 29 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இதில் திருவேங்கடத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி வாலிபால் போட்டியில் முதலிடமும், மாணவா்கள் அணி ,3ஆவது இடமும் பெற்றன.

அதே போன்று, தென்காசி மாவட்டம் மேலபாட்டக்குறிச்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவா் சந்தேஷ் 100 மீ ஓட்டத்தில் 2ஆம் இடமும், உயரம் தாண்டுதலில் யுவகேஷ் 3ஆம் இடமும், கயல்விழி மும்முறை தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றனா்.

உயரம் தாண்டுதலில் சாரதாதேவி முதலிடமும், பிரியதா்ஷினி மூன்றாம் இடமும், 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் மனோ வைஷாலினி 2 ஆம் இடமும் பெற்றனா். வெற்றி பெற்றவா்களை பள்ளி முதல்வா் வெ.பொன்னழகன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ... மேலும் பார்க்க

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில... மேலும் பார்க்க

கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி

2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்த... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. இதையொட்டி ... மேலும் பார்க்க