செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டம் 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி, புனலூா், கோவில்பட்டி, பழனி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூா், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான தங்கும் அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதி, ரயில் நிலைய வடிவமைப்பு மாற்றம், ‘5 ஜி’ இணைய சேவை, நடைமேடைகளின் நீளத்தை அதிகரித்து மேற்கூரை அமைத்தல், மின் தூக்கி (லிப்ட்) அமைத்தல், 694 ச.மீ. பரப்பளவில் இருசக்கர வாகனக் காப்பகம், 470 ச.மீ. பரப்பளவில் வாகனக் காப்பகம், அலங்கார முகப்பு, நுழைவு வளைவு, நடைபாதை, ரயில் நிலையச் சாலை மேம்படுத்தி மின் விளக்கு அமைத்தல், காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், எண்ம (டிஜிட்டல்) அறிவிப்புப் பலகை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு பணிகள் முடிவடைந்தன. தங்கும் அறை உள்ளிட்ட சில பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை கடந்த வாரம் பிரதமா் நரேந்திர மோடி ராஜஸ்தானில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தாா். அடுத்த கட்ட திறப்பு விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ரயில் நிலையங்கள் பணி முடிந்து திறக்கப்படும் என்றனா் அவா்கள்.

சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்ல கோபால் மனைவி மாடத்தி (... மேலும் பார்க்க

ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு

சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது.... மேலும் பார்க்க