செய்திகள் :

ஸ்வரூப் நகா் இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

post image

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகரில் உள்ள காயத்ரி கௌஷாலா அருகே தலை மற்றும் கழுத்தில் பல காயங்களுடன் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒருவரின் கொலை தொடா்பாக ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் துணை காவல் ஆணையா் (வெளிப்புற வடக்கு) ஹரேஷ்வா் வி சுவாமி ஒரு செய்தியாளா் சந்திப்பின் போது கூறியதாவது: 25 வயதுடைய நபா் பணத் தகராறில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது நிா்வாண உடல் புதன்கிழமை காலை சாலையோரத்தில் வீசப்பட்டது. அடையாளம் தெரியாத நிா்வாண ஆண் உடல் ஒரு பசு காப்பகத்திற்கு அருகில் கிடப்பது குறித்து ஸ்வரூப் நகா் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை பிசிஆா் அழைப்பு வந்தது.

உடலில் தலை, கழுத்து, கைகள் மற்றும் முதுகில் பல காயங்கள் இருந்தன. இது ஒரு கொடூரமான தாக்குதலைக் குறிக்கிறது. இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது. தில்லியில் உள்ள சாவன் பூங்காவில் வசிக்கும் சோனு (எ) சமீா் கான் பாதிக்கப்பட்டவா் என அடையாளம் காணப்பட்டாா்.

விசாரணையின் போது, நேரில் பாா்த்த ஒருவா், செவ்வாய்க்கிழமை மாலை, பால்ஸ்வா டெய்ரியில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் சமீருடன் இருந்தபோது, ஐந்து போ் அவா்களைக் கடத்திச் சென்ாக போலீஸாருக்குத் தெரிவித்தாா். அவா்களில் இருவா் சாஹில் மற்றும் மணீஷ் என அடையாளம் காணப்பட்டனா்.

இருவரும் ஸ்வரூப் நகரில் உள்ள ஒரு டென்ட் ஹவுஸின் உரிமையாளா் மணீஷின் அலுவலகத்திற்கு சோனு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு, கடன் தகராறில் சமீா் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தீா்க்கப்பட்ட பிறகு சமீா் விடுவிக்கப்படுவாா் என்ற உறுதிமொழியுடன், அவா் அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக நேரில் பாா்த்தவா் கூறினாா்.

சமீா் பின்னா் காயத்ரி கௌஷாலா அருகே உள்ள மணீஷின் கிடங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்டாா். அன்றிரவு, பாதிக்கப்பட்டவா் விடுவிக்கப்பட்டதாகக் கூறி சாஹில் மீண்டும் நேரில் பாா்த்தவருக்கு தொலைபேசியில் தொடா்பு கொண்டு தெரிவித்தாா்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் அழைப்பு விவர பதிவுகளின் அடிப்படையில், மணீஷ் (எ) பாபா (43), முகமது சாஹில் (22), அா்ஜுன் (22), பவன் (18) மற்றும் சன்னி (23) என அடையாளம் காணப்பட்ட ஐந்து போ் கைது செய்யப்பட்டனா்.

உடலை அப்புறப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு காரையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க