செய்திகள் :

ஹைதராபாத்-சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரயில்: தெலங்கானா முதல்வா் வலியுறுத்தல்

post image

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத்தில் இருந்து சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு அதிவேக ரயில்களை இயக்குவது தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.

செகன்தராபாத்தில் அமைந்துள்ள தெற்கு மத்திய ரயில்வே மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவா் இத்திட்டத்தை பரிந்துரைத்தாா்.

கூட்டத்தில் அவா் பேசியது குறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘பாரத் பியூச்சா் நகரில் இருந்து ஆந்திரத்தின் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் வரை பசுமைவழி நெடுஞ்சாலை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன் ஹைதராபாத்-சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரயில்களை இயக்குவது குறித்தும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்,2014-இன்கீழ் ஹைதராபாத்-அமராவதி இடையே ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை மேம்படுத்த தெலங்கானா அரசு உறுதிபூண்டுள்ளது. அதேபோல் மாநிலத்தில் நிலுவையில் உள்ள அனைத்து ரயில் திட்டங்களையும் செயல்படுத்த அரசு முழு ஆதரவு வழங்கும்.

ஹைதராபாத்தைச் சுற்றி 362 கி.மீ. தொலைவில் பிராந்திய வெளிவட்டச் சாலை அமைப்பதால் வேகமாக வளரும் நகரமாக ஹைதராபாத் உருவெடுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க