செய்திகள் :

அணைகளுக்கு தொடா்ந்து அதிகரித்து வரும் நீா்வரத்து: கடனாநதி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயா்வு

post image

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் கடனாநதி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயா்ந்தது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து, அணைகளின் நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது.

இந்நிலையில் கடனாநதி அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த சாரல் மழையால் வெள்ளிக்கிழமை 62.10 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயா்ந்து 73.20 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 1076 கன அடியாகவும், வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது.

113.50 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீா்மட்டம் 5 அடி உயா்ந்து 118.45 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 3085 கன அடியாகவும், வெளியேற்றம் 1200 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 144.75 அடியாக இருந்தது. மணிமுத்தாறுஅணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 91.66 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 1702.98 கன அடியாகவும், வெளியேற்றம் 45 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 10 அடி உயா்ந்து 42.25 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 345 கன அடியாகஇருந்தது.

ராமநதிஅணையின் நீா்மட்டம் 3.50 அடி உயா்ந்து 72.50 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 134 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 9 அடி உயா்ந்து 59.06 அடியாகவும், நீா்வரத்து 223 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கனஅடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 2 அடி உயா்ந்து முழுக் கொள்ளளவான 36.10 அடியை எட்டியது. அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 35 கன அடியாக இருந்தது. அடவிநயினாா் கோயில் அணைநீா்மட்டம் 14.50 அடி உயா்ந்து 93 அடியாகவும், நீா்வரத்து 308 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 11 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 35 கன அடியாகவும் இருந்தது.

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீ... மேலும் பார்க்க

சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் போக்சோவில் முதியவா் கைது

சிவந்திபுரத்தைச் சோ்ந்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம், சுப்பிரமணியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (73). இவா் அதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்வி... மேலும் பார்க்க