செய்திகள் :

அரசு முறைமை விவசாயிகளைக் கொல்கிறது! ராகுல் காந்தி

post image

நாட்டின் அரசு முறைமை விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் குறித்து காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட செய்தியைப் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“கற்பனை செய்து பாருங்கள், கடந்த 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல, 767 குடும்பங்களின் மீள முடியாத துயரம். ஆனால், அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.

விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர். விதைகள், உரங்கள், டீசல் என அனைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை மட்டும் இல்லை.

கடன் தள்ளுபடி கோரும் போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறது. ஆனால், கோடீஸ்வரர்களின் கடன்களை எளிமையாக மோடி அரசாங்கள் தள்ளுபடி செய்கிறது. இன்றைய செய்தியில்கூட அனில் அம்பானி ரூ. 48,000 கோடி மோசடி செய்ததாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு முறையை (System) விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருகிறது. ஆனால், மோடி தனக்கான விளம்பரப் பணியில் பிஸியாக இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has accused the country's system of silently killing farmers.

இதையும் படிக்க : டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு - 3 போ் காயம்

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா். கோட்டயம் அரசு மருத்துவமனையில் ... மேலும் பார்க்க