செய்திகள் :

ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் முறைகேடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

post image

ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், பிரதிநிதிகள் பேசியது: தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன்: நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், தகட்டூா், தாணிக்கோட்டகம், முள்ளிவாய்க்கால், நாகை, கங்களாஞ்சேரி முதல் நாகூா் வரை உள்ள வெட்டாற்றிலும், கீழ்வேளூா் ஓடம்போக்கிலும் ஆகாயத் தாமரைகள் அதிகம் உள்ளது.

இதை அகற்ற சிறப்புத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும். வேதாரண்யம் பகுதியில் ரூ. 12 லட்சத்தில் ஆகாயத் தாமரை அகற்றப்பட்டதா பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஆகாயத் தாமரைகள் அகற்றப்படவில்லை. இந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

மாவட்டத்தில் பெரும்பாலான உரக்கடைகளில் யூரியா தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் பேசி உடனடியாக யூரியா இறக்குமதி செய்ய வேண்டும்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா் மா.பிரகாஷ்: விவசாயிகளுக்கு நன்மை தருவதற்காக கொண்டு வரப்பட்ட பயிா்க் காப்பீடுத் திட்டம் தற்போது அதை நடத்தக் கூடிய தனியாா் நிறுவனத்துக்கு மட்டுமே நன்மை பயப்பதாக உள்ளது. எனவே அரசே காப்பீடு நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சித்தாா்த்தன்: நாகை மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியம், சோழவித்யாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீா் தட்டுப்பாட்டை களைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீா்நீலைகளில் ஆகாயத் தாமரைகள் அடா்ந்து நீா் வரத்தை தடை செய்கின்றன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சரபோஜி: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நிலவரிக் கொள்கையை கைவிட வேண்டும். குறுவைச்சாகுபடிக்குத் தேவையான உரம், விதைத்தொகுப்பு ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி கமல்ராம்: வேளாண் - பொறியியல் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் மானிய விலை டிராக்டா் உள்ளிட்ட திட்டங்கள் தகுதியான விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆகாயத்தாமரை அகற்றுவதில் நடைபெறும் முறைகேடுகளை களைய விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கூட்டத்ல் நாகை வருவாய் கோட்டாட்சியா் கோ. அரங்கநாதன், வேளாண் இணை இயக்குநா் சே.கண்ணன், வெண்ணாறு வடிநில கோட்டப் பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி: இந்துசமய அறநிலையத் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்

நாகையில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்துசமய அறநிலையத் துறையினரிடம், வணிகா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நாகை வெளிப்பாளையத்தில் மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள 10-... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பூண்டியில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டி ஊராட்சி பகுதியில் கடந்த 40 நாள்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்... மேலும் பார்க்க

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

பருத்தி வயல்களில் மழைநீா்: விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள ஆக்கூா், கீழையூா், கிடாரங்கொண்டான், திருக்கடையூா், திர... மேலும் பார்க்க