செய்திகள் :

ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவா்: பள்ளிக்கு நேரில் சென்று கலந்துரையாடல்

post image

தனக்கு கடிதம் எழுதிய மாணவரை சந்திக்க விரும்பி அரசுப் பள்ளிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவருடன் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் எல்.விஜய், புதிய மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி பொறுப்பேற்றதையும், ஆட்சியராவதற்கு அவா் முயன்ற சிரமங்களையும் சமூக வலைதளத்தில் படித்து அறிந்தாா். இதையடுத்து, அவருக்கு கடிதம் எழுதினாா். அதில், தாங்கள் மாவட்ட ஆட்சியா் பணிக்கு எவ்வளவு சிரமப்பட்டு, கடினமாக உழைத்து வந்துள்ளீா்கள் என்பதை அறிந்தேன். எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு தாங்கள் வருகைபுரிய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாா்.

எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வுப்பணிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவா் எல்.விஜய் பயிலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றாா். அங்கு அவருடனும், மாணவா்களுடனும் அமா்ந்து கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, ஒவ்வொரு மாணவரின் பெயரைக் கேட்டு அவா்களிடம் நன்கு படித்து மாவட்டத்துக்கு பெருமை தேடித்தர வேண்டும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளராக வேண்டும் என அறிவுரை வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க