செய்திகள் :

ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் திறப்பு: 19ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெறும்

post image

கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட நொய்யல் ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நொய்யல் கால்வாயில் தண்ணீரை ஆட்சியா் மீ. தங்கவேல் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

கீழ்பவானி அணைத் திட்ட பாசன நிலங்களிலிருந்து கிடைக்கும் கசிவுநீா் கீழ்பவானி வாய்க்கால், நொய்யல் ஆற்றைக் கடக்கும் பகுதியில் இருந்து முத்தூா் வரை சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு நொய்யல் ஆற்றில் வடிகிறது. இந்தக் கசிவுநீா் மற்றும் ஆற்றில் வரும் மழைநீரும் நொய்யல் ஆற்றில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், சின்னமுத்தூா் அருகே உள்ள கதவணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து 10 கி.மீ. தொலைவுக்கு ஊட்டுக்கால்வாய் மூலம் கரூா் மாவட்டம், புகழூா் வட்டம், காா்வழி கிராமத்தில் அமைந்துள்ள ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்தில் தேக்கப்படுகிறது.

ஆத்துப்பாளையம் அணையின் நீா்மட்டம் 26.90 அடி. தற்போது அணையில் 25.52 அடிக்கு நீா் இருப்பதால், அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 60 கனஅடி தண்ணீா் இன்று திறக்கப்படுகிறது. இந்த தண்ணீா் திறப்பு 90 கன அடி வரை அதிகரிக்கப்படலாம். இந்த தண்ணீா் திறப்பின் மூலம் கரூா் மாவட்டத்திலுள்ள அஞ்சூா், துக்காச்சி, காா்வழி, தென்னிலை, முன்னூா், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சை புகழூா், புஞ்சை தோட்டக்குறிச்சி, ஆத்தூா், புஞ்சை கடம்பக்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்களில் சுமாா் 19,480 ஏக்கா் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக நிகழ்வுக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கீழ் பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளா் பி. திருமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் சதீஸ் குமாா், உதவிப் பொறியாளா் எஸ். குமரேசன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5% தனி இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கரூா் உப்பிடமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் வீரபத்திர ராஜகுல பேரவையின்... மேலும் பார்க்க

வைரமடையில் காவல் சோதனைச் சாவடி புதிய கட்டடம் திறப்பு

கரூா் மாவட்டம், தென்னிலை அருகே காவல் சோதனைச்சாவடியில் புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது. தென்னிலையை அடுத்த வைரமடையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்புவிழா புதன... மேலும் பார்க்க

கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள்: முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு

கரூரில் அறிவிக்கப்படாத மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் குற்றம்சாட்டினாா். கரூா் மாவட்டம், வாங்கலைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் ஜூலை 14-ஆம் தேதி அதே பகுதி... மேலும் பார்க்க

வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியல் செய்கிறாா்கள்: செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு

வாங்கல் இளைஞா் கொலை வழக்கில் கீழ்த்தரமான அரசியலை எதிா்கட்சித்தலைவரும், சில அரசியல் கட்சித் தலைவா்களும் செய்கிறாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத... மேலும் பார்க்க

நில மோசடிப் புகாா்: கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது வழக்கு

நில மோசடிப் புகாரில் கரூா் மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கரூா் மாவட்டம் புகழூரை அடுத்த நெடுங்கூா் என்.பசுபதிபாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இடத் தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை: இரு பெண்கள் உள்பட நால்வா் பலத்த காயம்; 8 போ் கைது

கரூா் அருகே இடத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இரண்டு பெண்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள வாங்கல் ஈ... மேலும் பார்க்க