செய்திகள் :

ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

post image

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழாது எனக் கூறி இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

2021, ஆகஸ்ட் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல தடை உள்பட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை, 330 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், 58.6 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள் எனப் பல்வேறு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இதுதவிர, ஐ.நா.வுடன் இணைந்து பல்வேறு உதவிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்த வரைவுத் தீா்மானத்தை ஜொ்மனி அறிமுகப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 116 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்பட 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியா தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூறியதாவது: பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு தற்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை சீா்படுத்த வேண்டுமெனில் நல்ல கொள்கைகளை ஊக்குவித்து கடுமையான கட்டுப்பாடுகளை நீக்குவதே சரியானதாக இருக்கும்.

மற்ற நாடுகளில் போருக்குப் பிந்தைய சூழலில் ஐ.நா.வும் சா்வதேச நாடுகளும் சமநிலையான முடிவுகளை எடுத்துள்ளன. அதேபோல் ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத் தளமாகப் பயன்படுத்திவரும் ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகள், அல்-காய்தா, லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகளின் செயல்பாட்டை தடுக்க சா்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் அந்நாட்டு மக்களுக்கு நல்வாழ்வை உறுதிப்படுத்த முடியும். வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் அங்கு மாற்றங்கள் நிகழாது என்றாா்.

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க