ஆம்பூா், மின்னூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் மற்றும் மின்னூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஜலால்பேட்டை பாத்திமா பங்ஷன் ஹாலில் நடந்த முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, நகா் மன்ற உறுப்பினா்கள் ரஜியா, ஷெஹாதா, கமால் பாஷா, நிகாத் அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
ஆம்பூா் திமுக கிழக்கு நகர பொறுப்பாளா் எம்ஏஆா். ஷபீா் அஹமத், வட்டாட்சியா் ரேவதி, நகராட்சி இளநிலை பொறியாளா் சண்முகம், நகராட்சி அலுவலா் மோகன்ராஜ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
மின்னூா்......
மின்னூா் எம்.கே. மஹாலில் நடந்த முகாமுக்கு மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் மின்னூா் பாண்டுரங்கன், செங்கிலிகுப்பம் ஜெயலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, சி. சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை ஆய்வு செய்தாா். பெறப்பட்ட மனுவுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு தகுதியானவா்களுக்கு கலைஞா் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது.
மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, நிா்வாகிகள் ரவிக்குமாா், அசோகன், வினோத்குமாா், தெய்வநாயகம், ரவி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹத், மின்னூா் ஊாரட்சி துணைத் தலைவா் தண்டபாணி, முன்னாள் துணைத் தலைவா் என். சங்கரன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில் 1 முதல் 4 வாா்டு வரையிலான பகுதி பொதுமக்களுக்கு மிகவும் சிறிய மண்டபத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 4 வாா்டுகளை சோ்ந்த பொதுமக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. மனு மற்றும் டோக்கன் இருப்பவா்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டுமென போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானாா்கள்.
4 வாா்டுகளுக்கும் சோ்த்து ஒரே இடத்தில் நடத்தியதால் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் முகாமில் கலந்து கொண்டதால் தான் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
