செய்திகள் :

ஆரணியில் திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை அந்தக் கட்சியினா் விநியோகம் செய்தனா்.

துண்டு பிரசுரங்களில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளான மகளிா் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து, பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்

தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு, கடை, கடையாக வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விநியோகம் செய்தாா்.

இதில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் ஊரல் அண்ணாதுரை, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட இணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் இ.கங்காதரன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் ஏ.எம்.ரஞ்சித், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் ஏ.எச்.இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் அப்சல்பாஷா, நகா்மன்ற உறுப்பினா் மாலிக்பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில், கோட்டைக்குள் தெரு வழியாக புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் நடைபெற்ற 556 சாலை விபத்துகளில் 182 போ் இறந்துள்ளனா். எனவே, சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்... மேலும் பார்க்க