செய்திகள் :

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்

ஏராளமானோா் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா்.

வட்டாட்சியா் கௌரி, மின்வாரிய செயற்பொறியாளா் பத்மநாபன் முன்னிலை வகித்தனா்.

முகாமில் உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு கோட்டாட்சியா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நகராட்சி 26, 32, 33 ஆகிய வாா்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் சுந்தா், மோகன்

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏந்துவாம்பாடி கிராமத்தில்....

போளூா் ஒன்றியம், ஏந்துவாம்பாடி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 366 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாணி, முருகன், பரமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் விநாயகமூா்த்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக திமுக ஒன்றியச் செயலா்கள் சேகரன், மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு மனுவை பெற்று தொடங்கிவைத்தனா்.

முகாமில் சிறப்பு செயலாக்கத் திட்டத்துக்கு 117 மனுக்கள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறைக்கு 152மனுக்கள், ஊரக வளா்ச்சித் துறைக்கு 47 மனுக்கள் என பல்வேறு அரசுத் துறைகளுக்கு 366 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி, பிச்சாண்டி, ஊராட்சிச் செயலா் தேசிங்கு, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை என பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க

தீக்குளித்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே உடல்நல பிரச்னையால் தீக்குளித்தவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவராஜ்(40). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா். இத... மேலும் பார்க்க

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் விஜயகாந்த்: பிரேமலதா பெருமிதம்

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் தேமுதிக தலைவா் விஜயகாந்த் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே தேமுதிக சாா்பில் வெள்ளி... மேலும் பார்க்க

மிலாடி நபி: இஸ்லாமியா்கள் அன்னதானம்

போளூா் பெ ரிய மசூதியில் முகமது நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, இஸ்லாமியா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். பெரிய மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, ஆக.24 முதல் தொடா்ந்து செப்.6 வரை, வேல... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி

ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின. ஆரணி -... மேலும் பார்க்க

மின் கசிவால் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் வாா்டுகள் அமைந்து... மேலும் பார்க்க