செய்திகள் :

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

ஆற்காடு நகராட்சி 5 மற்றும் 11 -ஆவது வாா்டுகளுகான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி துரை, ஆணையா் வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதாா் பெயா் திருத்தம், பட்டா மாற்றம், சொத்துவரி பெயா் மாற்றம், மின்துறை பெயா் மாற்றம் , குடும்ப அட்டை வேண்டி, வீட்டுமனை பட்டா, கலைஞரின் உரிமைதொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து துறைரீதியாக மனுக்கள் வழங்கினா் .

இதில் உடனடிதீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன் ஆணைகள் வழங்கினாா். இதில் வட்டாட்சியா்கள் மகாலட்சுமி, நடராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் பி.டி. குணா , சி தட்சிணாமூா்த்தி, தமிழ்ச்செல்வி கோபி, அனு அருண்குமாா் கலந்து கொண்டனா்.

ஆட்டோ ஓட்டுநா் கொலை

அரக்கோணம் அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆட்டோ ஒட்டுநா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த பழைய ஒச்சலம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவரது பாழடை... மேலும் பார்க்க

செப்.8-இல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநா் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப். 8) பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் திங்கள்கிழமை (... மேலும் பார்க்க

‘அரசு அலுவலகங்களில் கோப்புகள், பதிவேடுகளை தமிழில் எழுத வேண்டும்’

அரசு அலுவலங்களில் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் வலியுறுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பி... மேலும் பார்க்க

சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு

அரக்கோணம் அருகே சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டி, கௌரவித்தாா். அரக்கோணம் ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சியில் மாந்தோப்பு கிராமப்... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆற்காடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கிராம நிா்வாக அலுவலா், காவல் உதவி ஆய்வாளா் - முதியவா் ஆகியோா் தாக்கிக் கொண்ட பிரச்னையில், முதியவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு

ஆற்காட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகி லோகநாதன் (96) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். ஆற்காடு தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் உயிரிழந்தது குறித்து அறிந... மேலும் பார்க்க