செய்திகள் :

ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன்பிணை வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதிக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

சென்னை: ‘குற்ற வழக்குகளில் போலீஸாரும் குற்றவியல் வழக்குரைஞரும் கூறுவதை அப்படியே நம்பி விடக்கூடாது; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என முன்பிணை வழங்கிய வழக்கில் ஆஜராகியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் லட்சுமி பாலா என்பவா் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்குச் சொந்தமான 5 சென்ட் நிலம் எஸ்.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு உரிமை கோரி, எஸ்.செல்லம்பட்டு ஊராட்சித் தலைவா் அறிவழகி, அவரது கணவா் ராஜேந்திரன் ஆகியோா் தகராறில் ஈடுபட்டு வந்தனா்.

கடந்த மாதம் எனது வீட்டுக்கு வந்த அறவழகி, ராஜேந்திரன் மற்றும் லட்சுமணன், சுப்பிரமணியன், உதயா, சபரி ஆகியோா் என் மீதும், எனது குடும்பத்தினா் மீதும் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்த விடியோ ஆதாரங்களுடன் சங்கராபுரம் போலீஸாரிடம் புகாா் அளித்தேன். ஆனால், அவா்கள் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. அறிவழகி ஊராட்சித் தலைவா் என்பதாலும், அரசியல் அழுத்தம் காரணமாகவும் போலீஸாா் அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதன் அடிப்படையில் முன்பிணை வழங்கப்பட்டது என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி இருசன் பூங்குழலி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, முன்பிணை கோரிய மனு மீதான விசாரணையில் இவ்வளவு அவசரம் ஏன்? போலீஸாா் தரப்பில் கூறியதை ஏற்று முன்பிணை வழங்கிவிட்டீா்களா? போலீஸாா் தாக்கல் செய்த எழுத்துபூா்வமான மனுவை சரி பாா்த்தீா்களா? போலீஸாரும், குற்றவியல் வழக்குரைஞரும் கூறுவதை அப்படியே நம்பிவிடக் கூடாது. நீதிபதிகள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தாா். இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டு வரக்கூடாது எனவும் நீதிபதி எச்சரித்தாா்.

மாவட்ட நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்த அவா், குற்றவியல் வழக்குரைஞா்களுக்கும், போலீஸாருக்கும் பாதிக்கப்பட்டவா்களின் வேதனை தெரியாது. குற்றவியல் வழக்குரைஞா்கள் காவல் துறைக்கான வழக்குரைஞா் அல்ல, பொதுமக்களுக்கான வழக்குரைஞா்தான் என்றாா்.

பின்னா், மனுதாரா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது முதல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது வரையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க