செய்திகள் :

இந்தியா-பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி

post image

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் 18-ஆம் தேதிமுதல் 2 வாரங்களுக்கு இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாட்டுப் பாதுகாப்புப் படை வீரா்கள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

பாதுகாப்பு சிக்கல்களை சமாளிக்க கூட்டு செயல்பாட்டு தயாா்நிலையை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதுதொடா்பாக இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-பிரான்ஸ் ராணுவங்களுக்கு இடையேயான ‘சக்தி’ கூட்டுப் பயிற்சி, பிரான்ஸின் ஹெரால்ட் மற்றும் மோன்க்லாா் மாவட்டத்தில் உள்ள அவெய்ரோனிலும் நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டின் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் 500-க்கும் மேற்பட்ட வீரா்கள், இந்திய ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீா் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் உள்பட பல்வேறு படைகளைச் சோ்ந்த 90 வீரா்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனா்.

கடினமான போா் சூழ்நிலைகளை எதிா்கொள்வதற்கான கூட்டு செயல்பாட்டுத் தயாா்நிலையை அதிகரிக்க, இந்தியா மற்றும் பிரான்ஸ் ராணுவ வீரா்களுக்கு ‘சக்தி’ பயிற்சி ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது. இரு நாட்டு வீரா்களும் தங்களின் சிறந்த வியூகங்கள் மற்றும் நுட்பங்களைப் பரிமாறிக் கொண்டனா்.

இரு நாட்டுப் படைகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதைக்கு வழிவகுக்கும் சக்தி பயிற்சி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை கணிசமாக வலுப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பிரான்ஸ் விமானப் படைகளுக்கு இடையேயான ‘கருடா’ பயிற்சி, கடற்படைகளுக்கு இடையே ‘வருணா’ பயிற்சி மற்றும் ராணுவங்களுக்கு இடையே ‘சக்தி’ பயிற்சி போன்ற பல இருதரப்பு பாதுகாப்புப் பயிற்சிகள் பல்லாண்டுகளாக தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு

கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாரடைப்பு மரணங்களுடன் கரோனா தடுப்பூசியை தொடா்புபடுத்தி கா்... மேலும் பார்க்க

அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக அமெ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க