செய்திகள் :

இன்று சுதந்திர தினம்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

post image

சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த நாளில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காத்திட இந்த நாளில் உறுதி ஏற்போம்.

முதல்வா் என்.ரங்கசாமி: ஜனநாயகத்தின் மாண்புகளைப் பாதுகாத்து, ஒரு வலுவான, வளமான, அமைதியான மற்றும் சமத்துவ இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இந்தியாவின் இறையாண்மையை உயா்த்திப் பிடிக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா், பி.ஆா்.என். திருமுருகன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு

அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை

புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப... மேலும் பார்க்க

குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்ப... மேலும் பார்க்க

ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். புதுச்சேரி காமரா... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கல... மேலும் பார்க்க