செய்திகள் :

இலவச கண் சிகிச்சை முகாம்

post image

போடி அருகே தருமத்துப்பட்டியில் ஏ.எச்.எம். அறக்கட்டளை, சிற்பி இந்தியா, போடி அரிமா சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏ.எச்.எம். அறக்கட்டளை மேலாண்மை இயக்குநரும், அரிமா சங்கத் தலைவருமான முகமது சேக் இப்ராஹிம் தலைமை வகித்தாா். அறக்கட்டளை இயக்குநா் ஸ்டெல்லா, மருத்துவா் யாஸ்மின் ரோஸ், திட்ட இணையாளா் மஞ்சு, அரிமா வட்டாரத் தலைவா் முருகன், அரிமா சங்கச் செயலா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா கண்ணொளி திட்ட மாவட்டத் தலைவா் நவநீதன் முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் 115 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 20 போ் கண் அறுவை சிகிச்சைக்காக தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 22 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. ஏ.எச்.எம். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் செல்வமகேஸ்வரி நன்றி கூறினாா். அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ராதா மணவாளன், அறக்கட்டளை பணியாளா்கள், செவிலியா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க