செய்திகள் :

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

post image

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறாா். நிறுவனத்தின் ஹாஸ்டலில் தங்கி உள்ளாா். இவா் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

இந்த நிலையில், தனது கைப்பேசியில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து பல பேரிடம் பேசி வந்தாா். அதன் மூலம் சாண்டி என்பவருடன் தொடா்பு ஏற்பட்டது. இந்நிலையில் டாண்டியை சந்திக்க ஜெகதீசன் பெருந்துறை, காஞ்சிக்கோயில் ரோடு, பாறைக்கடை பேருந்து நிறுத்துக்கு வந்துள்ளாா். அங்கு காத்திருந்தவா், ஜெகதீசனை காட்டுப் பகுதிக்குள் கூட்டி சென்றாா். அங்கு, அடையாளம் தெரியாத மூன்று நபா்களோடு சோ்ந்து ஜெகதீசனை தாக்கி அவரிடம் இருந்து ஜி.பே., மற்றும் ஏடிஎம்.,காா்டு மூலம் பணம் ரூ. 30 ஆயிரம் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனா். பலத்த காயமடைந்த ஜெகதீசனை, அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா்.

இதுகுறித்து காஞ்சிக்கோயில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனி நபா்களிடம் பணம், ஆவணங்களை வழங்க வேண்டாம்: வேளாண் துறை வேண்டுகோள்!

அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபா்களிடம் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வே... மேலும் பார்க்க

ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் ஜூலை 9-ல் ஏலம்!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட 5 மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே சனிக்கிழமை கடைக்குச் சென்று விட்டு சாலையைக் கடக்க முயற்சித்த பள்ளி மாணவி ஷயிலேஷினி (11) மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி... மேலும் பார்க்க

குடிபோதையில் ஆசிட்டை குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான குடிபோதையால் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமம் கூட்டெல்லைக்காட... மேலும் பார்க்க

கோ்மாளம் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆசனூா் முதல் கோ்மாளம் வரையுள்ள சாலையில் வ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. தினகரன்

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு புறநகா் மாவட்ட நிா... மேலும் பார்க்க