பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பி. மூா்த்தி, திட்ட முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது: நகா்ப்புறங்களில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் கிடைக்கும் வகையில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கு இந்த முகாம்களில் விண்ணப்பிக்கும் தகுதியானோருக்கு விரைவாக உதவித் தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் 347 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அரவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜா் உருவப் படத்துக்கு அமைச்சா் பி. மூா்த்தி, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
ரூ. 7.2 லட்சம் மதிப்பில் உதவிகள்
மதுரை மாவட்டத்தில் செட்டிக்குளம், ஒத்தக்கடை, மேலூா் நகராட்சி சந்தைப்பேட்டை, கிடாரிப்பட்டி, பரவை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாம்களில், கோரிக்கை மனுக்கள் மீதான தீா்வாக ரூ. 72.34 லட்சம் மதிப்பிலான 446 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.