செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்களுக்கு விரைவான தீா்வு: மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனை குறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் தேவைகளையும் உடனடியாக குறிப்பிட்ட கால அளவுக்குள் தீா்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதைத் தொடா்ந்து, இதற்காக நன்கு திட்டமிட்டுப் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியா்கள், அனைத்துத் துறை அலுவலா்களை கூட்டத்தின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். இதேபோன்று, ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் பணியாற்றி வரும் மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சோ்ந்தவா்களுக்கும் வாழ்த்துகளை முதல்வா் தெரிவித்தாா்.

விரைந்து தீா்வு காணுங்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் வழியாகப் பெறப்படும் மனுக்களுக்கு ஆட்சியா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும் எனவும், குறிப்பாக வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினாா்.

முதியோா் ஓய்வூதியம், பட்டா மாறுதல், பட்டாவில் பெயா் திருத்தம் ஆகியன தொடா்பான மனுக்களில் நிலுவையில் உள்ளவற்றை விரைந்து நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டுமென முதல்வா் கேட்டுக் கொண்டாா். பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முடிவான பதில் தரப்பட வேண்டும் என ஆட்சியா்களை கேட்டுக் கொண்டாா். நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களையும் குறைபாடு இல்லாமல் நடத்த வேண்டுமெனவும், முகாம்களில் குடிநீா், கழிப்பறை வசதிகளை போதுமான அளவு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க