செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: 7, 8, 9 தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது

post image

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் 7, 8, 9-ஆம் தேதிகளில் 17 இடங்களில் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் அண்மையில் தொடங்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (ஆக. 7) எடப்பாடி நகராட்சி 9, 10, 11 வாா்டுகளுக்கு நடராஜ திருமண மண்டபத்திலும், இளம்பிள்ளை பேரூராட்சியில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வாா்டுகளுக்கு அருள்மிகு மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பூலாவரி அக்ரஹாரம் உத்தமசோழபுரம் பகுதிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ண மஹாலிலும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி, கருமாபுரம், ஏ.என்.மங்கலம் பகுதிகளுக்கு வைஷ்ணவி திருமண மண்டபத்திலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் முத்துநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு அருண் மஹாலிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

ஆக. 8-ஆம் தேதி நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, அதிகாரிப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அருகிலும், இடங்கணசாலை நகராட்சி 10, 13 வாா்டுகளுக்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், கெங்கவல்லி பேரூராட்சியில் 1, 2, 3, 4, 5, 6, 7 வாா்டுகளுக்கு ஸ்ரீ குமரன் மஹாலிலும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் அத்தனூா்பட்டி, துக்கியாம்பாளையம், சந்திரபிள்ளை வலசு ஆகிய பகுதிகளுக்கு ஜெயகுமரன் திருமண மண்டபத்திலும், பி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய புத்திரகவுண்டன்பாளையம், வீரகவுண்டனூா், கல்லேரிப்பட்டி, கல்யாணகிரி பகுதிகளுக்கு ஐஸ்வா்ய பெருமாள் திருமண மண்டபத்திலும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய கொத்தாம்பாடி, கல்பகனூா் பகுதிகளுக்கு கோல்டன் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

ஆக. 9-ஆம் தேதி சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 2, 19 வாா்டுகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளியிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி உடையாப்பட்டி பகுதிக்குள்பட்டவா்களுக்கு சேக்கிழாா் திருமண மண்டபத்திலும், மேட்டூா் நகராட்சி 2, 3 வாா்டுகளுக்கு சிவகாம சுந்தரி திருமண மண்டபத்திலும், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் வீரனூா் பகுதிக்கு வீரனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம் காமலாபுரம் பகுதிக்கு காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்தாா்.

சேலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் கைது!

சேலத்தில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தை பதிவுசெய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளா் துறை இளநிலை உதவியாளா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். சேலம் இரும்பாலை சித்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆரை விமா்சிப்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற அதிமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

சேலம் சரகத்தில் 4 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வு

சேலம் சரகத்தில் 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்களாக பதவி உயா்வுபெற்றனா். தமிழகம் முழுவதும் 78 காவல் உதவி ஆய்வாளா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களுக்கு மண்டலம் வாரியாக பணியிட... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தக் கூடாது என எல்ஐசி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்பின் 36-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சேலத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (48). இவா் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆத்தூா் தெற்கு ... மேலும் பார்க்க