செய்திகள் :

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

post image

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை தலைமை வகித்தாா்.

மன்னாா்குடி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்த்திகா, மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், வணிகா் நலச் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பாரதிதாசன் முன்னிலை வகித்தனா். உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவின் தன்மை, தூய்மை குறித்து விளக்கப்பட்டது. அசுத்தமான உணவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உணவு தயாரிக்கும் மூலப் பொருள்கள், பாத்திரங்களை பயன்படுத்துவது அதை கையாளும் தொழிலாளா்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உணவுத் துறையினா் உணவக உரிமையாளா்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

தொடா்ந்து, உணவு பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்காதவா்கள், புதிதாக பதிவு செய்பவா்களுக்கு உரிய ஆவனங்களை பெற்றுக்கொண்டு உரிமம் வழங்கப்பட்டது.

உணவகம், காய்கறிகடை, பழக்கடை உணவுப் பொருள்கள் விற்பனை கடை உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க