செய்திகள் :

உணவு, உடைகள் மீது அதிருப்தி! கணவர் மீது மனைவி தொடர்ந்த வழக்கு ரத்து!

post image

தான் சமைக்கும் உணவு மற்றும் அணியும் உடைகள் மீது குறைகூறுவதாக கணவர் மீது அவரது மனைவி சுமத்திய வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.

மும்பையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஒருவர், தனது மனைவி சமைக்கும் உணவு, அவர் அணியும் உடைகள் குறித்து கடுமையான கருத்துகளைக் கூறுவதாக, அவர் மீது அவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உணவு மற்றும் உடை மீதான எரிச்சலூட்டும் கூற்றுகளை கொடுமையான அல்லது துன்புறுத்தும் செயல்கள் என்று கூற முடியாது. அவ்வாறு இருக்கையில், கணவரையோ அவரது குடும்பத்தினரையோ விசாரணைக்கு கேட்டுக்கொண்டால், அது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும் என்றுகூறி, வழக்கை ரத்து செய்தது.

இதனிடையே, கணவர் மீதான மனைவியின் குற்றச்சாட்டுகளிலும் உண்மைத்தன்மை இல்லாதது தெரிய வந்தது. கணவருக்கு இருந்த உடல்நலப் பிரச்னைகள் குறித்து முன்னரே தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், திருமணத்துக்கு முன்னதாகவே தான் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் குறித்து மனைவிக்கு கணவர் தகவல் பரிமாற்றத்தில் கூறியிருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், திருமணத்துக்கு முன்னரே கணவரின் மருத்துவம் சார்ந்தவை அவருக்கு தெரிந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, தீபாவளியன்று ஒரு ஃபிளாட் வாங்க ரூ. 15 லட்சம் கேட்டதாகவும் மனைவி குற்றம் சாட்டினார். ஆனால், ஏற்கெனவே கணவரிடம் ஒரு ஃபிளாட் இருக்கும்போது ஏன் கேட்கிறார்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்ட... மேலும் பார்க்க

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? -பிரதமர் மோடி சொன்ன விஷயம்

பெங்களூரு: பெங்களூரில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான அடிக்கல்லை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் ஆரஞ்சு லைன் என்றழைக்கப்படும் இந்த மெட்ரோ ர... மேலும் பார்க்க

பெண்ணின் உயிரை மாய்த்த போக்குவரத்து நெரிசல்! கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

மகாராஷ்டிரத்தில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில், சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தில் பால்கர் மாவட்டத்தில் சாயா பூரவ் (49) என்ப... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் மெ... மேலும் பார்க்க

தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!

ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க