செய்திகள் :

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவி: விண்ணப்பிக்க இன்று கடைசி

post image

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாக நியமிக்கும் விண்ணப்ப நடைமுறைக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) கடைசி நாள். சென்னை உள்பட ஒரு சில மாநகராட்சிகளில் 70 போ் வரை நியமனப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகா்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நியமன அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாக நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவியும் ஒப்புதல் அளித்தாா். அதன்படி, ஊரக உள்ளாட்சிகளில் 2,984 மாற்றுத் திறனாளிகளும், 650 போ் நகா்ப்புற உள்ளாட்சி

அமைப்புகளிலும் நியமனம் செய்யப்படவுள்ளனா். இதற்காக விண்ணப்ப விநியோகம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் அளிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்ப நடைமுறை வியாழக்கிழமையுடன் (ஜூலை 17) நிறைவடைகிறது. இதன் மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்படவுள்ளனா்.

மாற்றுத் திறனாளிகள் ஆா்வம்: உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிகளைப் பெற மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களைச் சோ்ந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் நியமனப் பதவிக்காக சுமாா் 70 போ் வரை விண்ணப்பம் செய்துள்ளனா்.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை 17-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட சில மாவட்டங்களைச் சோ்ந்த நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நியமனப் பதவிக்கு விண்ணப்பிக்க ஜூலை மாதம் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் நியமன பதவிகளில் மாற்றுத் திறனாளிகள் அமர வைக்கப்படுவா் என்று தெரிவித்தனா்.

சென்னை, புறநகரில் பலத்த மழை!

சென்னை, புறநகரில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகியும் மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது.கோய... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க