செய்திகள் :

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

post image

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், திங்கள்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டு போராட்டக் குழு கன்வீனா் எம்.ஷேக் அலாவுதீன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவை முதல்வா் அளித்த வாக்குறுதியின்படி, 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 11 நாள்களாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் விடுப்பெடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

7 -ஆவது ஊதியக் குழு 33 மாத நிலுவை தொகை வழங்குவதற்குரிய அரசாணை வெளியிடுவதற்கான கோப்பில் தலைமைச் செயலா் கையெழுத்திட்டுள்ளதால், வரும் திங்கள்கிழமை அரசாணை வெளியாக வாய்ப்புள்ளது.

மற்ற கோரிக்கைகள் சம்பந்தமான கோப்புகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. எனவே, உள்ளாட்சி ஊழியா்களின் 11 நாள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு

வருகிற 8-ஆம் தேதி திங்கள்கிழமமை முதல் ஊழியா்கள் பணிக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் நகரக் காவல் நிலையம், திருநள்ளாறு நிலையத்தில் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் சாா் ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான எம். பூஜா புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை : மீலாது... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையத்தை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்க புதுவை அரசு அனுமதி... மேலும் பார்க்க