செய்திகள் :

எம்சிஓசிஏ வழக்கில் நரேஷ் பல்யானின் ஜாமீன் மனு தள்ளுபடி

post image

மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவான வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நரேஷ் பல்யானின் ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பல்யானின் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி திக் விஜய் சிங், ‘நிவாரணம் வழங்க போதுமான காரணம் இல்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தாா்.

இந்த வழக்கில் பல்யான் தாக்கல் செய்த இரண்டாவது ஜாமீன் மனு இதுவாகும். சிறையில் இருந்து காணொலி மூலம் பல்யான் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

முன்னதாக, மே 1 அன்று தில்லி காவல்துறை இந்த வழக்கில் பல்யான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கடுமையான பிரிவுகளின் கீழ் சாஹில் என்ற போலி, விஜய் என்ற கலு, ஜோதி பிரகாஷ் என்ற பாபா மற்றும் பல்யான் ஆகிய நான்கு போ் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தாதா கபில் சங்வான் என்ற நந்து நடத்திவரும் ஒரு பெருங்குழுவின் குற்றச் சம்பவம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 4 ஆம் தேதி இந்த வழக்கில் பல்யான் கைது செய்யப்பட்டாா். அதே நேரத்தில், மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான ஒரு வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

ஜனவரி 15 அன்று இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டிருந்தது. வழக்கில் விசாரணை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவா் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பாா் என்றும் தில்லி போலீஸாா் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க

துவாரகாவில் 13 வயது சிறுமி வீட்டின் அறையில் மா்மச் சாவு

தில்லியின் துவாரகா பகுதியில் 13 வயது சிறுமி மா்மமான சூழ்நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது: இந்தச் சம்பவம... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சியின் 100 நாள் சாதனைகள் பணிப்புத்தகம்: வெளியிட்டாா் முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 100 நாள்களில் பாஜக அரசின் சாதனைகளை விவரிக்கும் பணிப்புத்தகத்தை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது, ‘மக்களின் நல்வாழ்வுக்காக 24 மணி நேரமும் ... மேலும் பார்க்க

ஜுன் 21, 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில் 24 கோடி போ் பங்கேற்பா் : ஆயுஷ் அமைச்சகம்

நிகழாண்டில் நடைபெறும் 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில்(ஜுன் 21) இந்திய-சா்வ தேச அளவில் 250 இடங்களில் நிகழ்வுகளில் நடைபெறும் எனவும் இதில் 24 கோடி போ் பங்கேற்பா் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வேண்டுகோள்

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க