செய்திகள் :

ஏஐ துறையில் தடம் பதிக்கும் இந்தியா?

post image

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாட்டில் இந்தியா தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், செயற்கை நுண்ணறிவு மையங்களுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மேலும் மேம்படுத்துவதற்காகவும் செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியது. இந்த நிதி ஒதுக்கீட்டை வரவேற்ற பொருளாதார வல்லுநர்களும் தொழில்துறை வல்லுநர்களும், செயற்கை நுண்ணறிவுக்கான நிதி ஒதுக்கீடு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வியை அதிகரிக்கும் என்றும் கூறினர்.

இதையும் படிக்க:இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

வணிக தொழில்நுட்ப அறிக்கை 2024-ன்படி, இந்திய வணிகங்களில் 23 சதவீதத்தினர் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவை செயல்படுத்தியுள்ளதாகவும், இந்தாண்டில் 73 சதவீதத்தினர் செயற்கை நுண்ணறிவை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறுகிறது.

கூடுதல் தகவலாக, தற்போது இணையப் பயனாளர்களில் முன்னணியில் உள்ள சாட் ஜிபிடி, டீப்சீக், அலிபாபா க்வென் 2.5 மேக்ஸ் ஆகிய மூன்று செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கு இணையாகவும், அதனைவிட மேம்பட்டதாகவும் இந்தியாவில் அடுத்த 8 முதல் 10 மாதங்களுக்குள் இந்தியா ஏஐ திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தளம் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சியில் பட்டியலினத்தவர் கூக்குரல்களைக் கேட்க யாருமில்லை: பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் பட்டியலினப் பெண்ணின் படுகொலை சம்பவத்துக்கு காங்க... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம்!

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை கூறுகிறது.தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில... மேலும் பார்க்க

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க