அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழ...
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணி தொடக்கம்
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிக்கான பூமிபூஜை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தை ரூ. 3.26 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணி, ஒட்டன்சத்திரம் நகராட்சி கைராசி நகரில் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
இப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
அதையடுத்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற பூமிபூஜையில் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, பழனி கோட்டாட்சியா் கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, நகராட்சி ஆணையா் சுவேதா, நகராட்சி பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளா் ராஜ்மோகன், கணக்காளா் சரவணன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைத்தல், சுற்றுச்சுவா், கழிவுநீா் வாய்க்கால் உள்ளிட்ட பணிகள் நடைபெறுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.