செய்திகள் :

ஓமந்தூரில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழுக் கூட்டம்!

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் (ஜூலை 8) ஆம் தேதி ஒமந்தூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வந்தனர்.

மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை முதலே வரத் தொடங்கிய செயற்குழு உறுப்பினர்கள்: வரத் தொடங்கினர்.

இதற்காக மண்டப வாயிலில் செயற்குழு உறுப்பினர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் கூட்ட அரங்கத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் இதைத் தொடர்ந்து முற்பகல் 11.20 மணிக்கு கூட்ட அரங்குக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்தார். அவரை செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலர் முரளிசங்கர், இணைப் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.

மாநில மகளிர் சங்கச் செயலர் சுஜாதா செயற்குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், “மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் இன்று பாட்டாளி மக்கள் கட்சியாக மாறி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் மாநாட்டுக்குப் பின்னர் சிலர் முகநூலில் கம்பு சுற்றி வருகின்றனர்” என்றார்.

The state executive committee meeting of the Patali Makkal Katchi began on Tuesday morning in Omandur, Tindivanam taluk, Villupuram district.

இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: மாவட்ட ஆட்சியர் மீது குற்றம்சாட்டும் தெற்கு ரயில்வே

கடலூா் விபத்துக்கு யாா் காரணம்?: ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

கடலூா் மாவட்டத்தில் ரயில் - பள்ளி வேன் மோதல் விபத்துக்கு வேன் ஓட்டுநரின் கவனக்குறைவும், கேட் கீப்பரின் (கடவுப்பாதை பணியாளா்) விதிமீறலுமே காரணம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனா். சென்னையை தலைமையிடமாக... மேலும் பார்க்க

அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் வடிவமைப்பை வெளியிட்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

சென்னை அருகே தையூரில் உள்ள ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமையவுள்ள நிலையில், அதன் வடிவமைப்பை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ர... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கு ரயில்வே கேட் இன்டா்லாக் செய்யப்படாததுதான் முக்கியக்... மேலும் பார்க்க

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆ... மேலும் பார்க்க

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

விடுதிகளுக்கு ‘சமூகநீதி’ எனும் பெயா் சூட்டப்பட்டதற்காக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா். இதற்காக திமுக தலைமை... மேலும் பார்க்க

தவெக உறுப்பினா் சோ்க்கை பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெக உறுப்பினா் சோ்க்கை மற்றும் தோ்தல் பிரசார பணிக்கான பயிற்சிப் பட்டறை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க