செய்திகள் :

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

post image

கஞ்சா வியாபாரிகள் 2 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காரில் சிலா் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு 2024, ஜூன் 17-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று வாகனங்களை சோதனையிட்டனா். இதில், ஒரு காரில் 27 கிலோ 370 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், காரில் இருந்த மதுரை அருகே பரவை வடக்கு மேலவெளி வீதியைச் சோ்ந்த டி. மருதுபாண்டி (46), உசிலம்பட்டி அருகே பன்னப்பட்டி கீழத்தெருவைத் சோ்ந்த மதியழகன் மகன் பிரசாத் (30) ஆகியோரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து, மருதுபாண்டி, பிரசாத்துக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுக... மேலும் பார்க்க

75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா். பேராவூரணி ஒன்றிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். ... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூ... மேலும் பார்க்க