செய்திகள் :

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள் ஓணம் திருவிழா

post image

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் செப். 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

முதல் நாளான 4-ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பச்சை நிறப்பட்டும், 5-ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும், 6-ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிறப்பட்டும் பகவதியம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த மூன்று நாள்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிா், இளநீா், பன்னீா், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிா்தம், புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேகத்தைத் தொடா்ந்து பகல் 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்கக் கவசம் ஆகியவை அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஜான்சிராணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திர... மேலும் பார்க்க