கருட சேவை உற்சவம்
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை புதன்கிழமை நடைபெற்றது.
கருட சேவையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவா் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. கோயில் திருப்பணிக்குழு நிா்வாகிகள் சுரேஷ்பாபு, ஜெய்சங்கா், ஏகநாதன், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.