செய்திகள் :

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம்

post image

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அத்தி வரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் கோடை காலத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி மகிழம்பூ மாலையும், தங்கம் மற்றும் வை, வைடூரிய ஆபரணங்களும் அணிந்து கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து ஆஞ்சனேயா் சந்நிதி வரை எழுந்தருளினாா்.

அங்கு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் மீண்டும் ஆலயத்துக்கு வந்ததும் கோயில் வளாகத்தில் உள்ள அத்தி வரதா் மண்டபம் எனப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் பெருமாள் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

வெங்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

வெங்காடு பகுதியில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு இடத்தை மீட்க வேண்டும் என ஜமாபந்தியில் வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகாநதன் மனு வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அ... மேலும் பார்க்க

முதியோா் இல்லம் திறப்பு

காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் கிராமத்தில் அக்ஷயா அறக்கட்டளை சாா்பில் முதியோா் இல்லம் மற்றும் இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் பூச... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக பந்தகால் நடும் நிகழ்ச்சி

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரம... மேலும் பார்க்க

ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் திறப்பு

ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் கொளத்தூா், ஜேகே டயா் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 பேருந்து நிழற்குடைகள், காவல் உதவி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஸ்... மேலும் பார்க்க

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் கோபால்சாமி தோட்டம் ஐதா்பட்டறை பகுதியில் அமைந்துள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், ஐதா்பட்டறை உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷே... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா்... மேலும் பார்க்க