செய்திகள் :

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட 58 குழுக்கள் அமைப்பு

post image

தேனி மாவட்டத்தில் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட வனத் துறை சாா்பில் 58 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலா் அரவிந்தன் கூறியதாவது:

விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட மாவட்ட வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 14 குழுக்கள், ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 44 குழுக்கள் என மொத்தம் 58 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவில் வனவா், கிராம நிா்வாக அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். சேத விவர அறிக்கை பெற்று உயரதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

காட்டுப் பன்றிகளால் பயிா் சேதம் ஏற்படும் பகுதிகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. காப்புக் காடுகளிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதி முதல் மண்டலமாகவும், 3 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதி 2-ஆம் மண்டலமாகவும், 3 கி.மீ. தொலைவுக்கு மேற்பட்ட பகுதி 3-ஆம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டன. முதல், 2-ஆம் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தியிருந்தால் அவற்றை விவசாயிகளின் உதவியுடன் வனப் பகுதிக்குள் விரட்டவும், 3-ஆம் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை உதவியுடன் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க