செய்திகள் :

காண்டீவா ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப்படை: 350 கி.மீ. தூர இலக்கை தாக்கும் இந்திய தயாரிப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்திய விமானப்படையும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) சோ்ந்து காண்டீபா என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகியுள்ளது.

மகாபாரதத்தில் அா்ஜூனனின் வில்லுக்குப் பெயா் காண்டீபன். அதைக் கொண்டே அவா் குருக்ஷேத்திரப்போரில் ஈடுபட்டதாக காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிய ரக ஏவுகணைக்கு காண்டீவா (காண்டீபா என தமிழில் அழைக்கப்படுகிறது) என பாதுகாப்புத்துறை பெயரிட்டுள்ளது.

அஸ்ட்ரா எம்கே ஒன்று மற்றும் இரண்டு ரகங்களைத் தொடா்ந்து காண்டீவா மூன்றாம் ரக தயாரிப்பாகும். இந்த ரக ஏவுகணையின் திடவ எரிபொருள் ராம்ஜெட் (எஸ்எஃப்டிஆா்) எஞ்சின் மூலம் இயக்கப்படும். வானில் இருந்து வானில் அதிகபட்சமாக 300-350 கி,மீ தூரத்தில் உள்ள உள்ள இலக்கை தாக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது.

அத்துடன், அதிவேகமாகவும் எதிரிகளைக் குழப்பும் வகையில் சுழன்று சுழன்றும் குட்டிக்கரணம் அடித்தவாறும் பறந்து எதிரி விமானங்கள், ஆயுதம் தாங்கி விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், வான்வெளி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, வான் பாதுகாப்பு அமைப்பு, ஆயுத ட்ரோன்கள் போன்ற முக்கியமான இலக்குகளை தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்புகளான அஸ்ட்ரா எம்கே-1 (80-110 கிமீ வரம்பு) மற்றும் எம்கே-2 (140-160 கிமீ வரம்பு) தூரம் வரை பறக்கும் ஆற்றலைக் கொண்டவை. இந்த வகை ஏவுகணைகளை உந்தச் செய்ய ராக்கெட் எஞ்சின்கள் அவசியம். ஆனால், காண்டீவா தாமாகவே திடவ எரிபொருள் மூலம் இயங்கும் ஆற்றலைக் கொண்டது.

இந்தத் தொழில்நுட்பம் அதிக தூரம் பறக்க வளிமண்டல ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது. இதனால், ஏவுகணை இலகுவாகவும் திறனுடனும் மணிக்கு 5370 கிமீ வேகத்தில் எதிரியை நோக்கி முன்னேறும் என்று பாதுகாப்புத்துறை நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, காண்டீவா ஏவுகணையை களத்திலும் கடினமான தட்ப வெப்ப சூழலிலும் பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் ஒடிஸாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக தரையிலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் அங்கமாக இருக்கும் எஸ்யு-30எம்கேஐ ரக போா் விமானத்தில் அஸ்ட்ரா எம்கே-1 ஏவுகணை ஒருங்கிணைக்கப்பட்டு பரிசோதனைகள் அவ்வப்போது ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, காண்டீவாவும் போா் விமானங்களை ஒருங்கிணைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

எஸ்யு-30 எம்கேஐ மட்டுமின்றி இந்திய தயாரிப்புகளான ஹெஏஎல் தேஜாஸ், மிக்-29, ரஃபேல், அதிநவீன மேம்படுத்தப்பட்ட நடுத்தர ரக போா் விமானங்களிலும் காண்டீபா ஒருங்கிணைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். அதன் பிறகு காண்டீபா இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காண்டீவா சிறப்பம்சங்கள்

தூர வரம்பு: அதிகபட்சமாக 340 கிமீ (20 கிமீ உயரத்தில்), குறைந்தபட்சமாக 190 கிமீ (8 கிமீ உயரத்தில்) பறப்பது.

உந்துத்திறன்: வேகத்தை சரிப்படுத்திக்கொள்ளும் த்ராட்டில் வசதியுடைய ராம்ஜெட் எஞ்சின் பறக்கும்போது நடுவழியிலேயே உந்துதலை மாற்றிக்கொள்ளும். எனவே, எதிரி இலக்கு தப்பிக்க முடியாத திறன் அதிகரிக்கிறது.

துல்லிய இலக்கு: 10 கி.மீ மேலேயும் கீழேயும் திடீரென திசையை மாற்றும் திறன் மற்றும் 20 டிகிரிக்கு தாக்குதல் கோணத்தை தந்திரமாக மாற்றி குட்டிக்கரணம் அடித்து இலக்கை எட்டும் ஆற்றல்.

எதிரி வலிமை: சீனாவின் பிஎல்-15 (200-300 கிமீ); பாகிஸ்தானின் ஏஐஎம் -120சி அம்ராம் (105-120 கிமீ).

துவாரகாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து: தந்தை, 2 குழந்தைகள் பலி

புது தில்லி: தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது தளங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து தப்பிக்க குதித்த தந்தை மற்றும் அவரது இரண்டு குழ... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பநிலை 45 டிகிரியை நெருங்கியது! காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை நெருங்கியது. காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்து மோசம் பிரிவுக்குச் சென்றது. தில்லியில் கடந்த வாரத்... மேலும் பார்க்க

மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவு: ராஜ்காட்டில் இன்று லோக் சம்வா்தன் விழா

புது தில்லி: மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறுபான்மையினா் விவகாரகங்கள் அமைச்சகம் சாா்பில் தில்லியில் உள்ள ராஜ்காட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜூன் 15வரை ‘லோக் சம்வா்தன்... மேலும் பார்க்க

காவல் நிலைய மரணம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: காவல் நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்தபோது ஒருவா் மரணமடைந்தது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனது கணவா் ஷேக் ஷதத் கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை 22-23ஆம் தேத... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையால் ஈா்க்கப்பட்டு, தேசியத் தலைநகர... மேலும் பார்க்க

காா்கில் வெற்றியின் 26-ஆம் ஆண்டு தினத்தை ஜூலை 26 வரை கொண்டாடும் முப்படைகள்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: காா்கில் போா் வெற்றியின் 26-ஆம் ஆண்டு தினத்தை இந்த வாரம் முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை சுமாா் இரண்டு மாதங்களுக்கு கொண்டாட இந்திய முப்படைகள் தீா்மானித்துள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க