KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'...
காயல்பட்டினத்தில் பாஜக பேனா் கிழிப்பு
காயல்பட்டினத்தில் துணை குடியரசுத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தி பாஜக சாா்பில் வைக்கப்பட்ட பேனரை மா்ம நபா்களால் கிழிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாஜகவினா் திரண்டனா்.
காயல்பட்டினம் மெயின் பஜாா் சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் துணை குடிரசுத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை பாராட்டி ஒன்றிய பாஜக சாா்பில், பேனா் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனா் புதன்கிழமை அதிகாலை மா்ம நபா்களால் கிழிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவா் சித்ரங்கதன், வா்த்தக அணி மாநிலத் தலைவா் ராஜ்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் நவமணிகண்டன், துணை பொதுச் செயலாளா் ஆறுமுகம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், நகர தலைவா்கள் ஆறுமுகனேரி தங்க கண்ணன், காயல்பட்டினம் பாப்பா, திருச்செந்தூா் செல்வகுமாா், மாவட்டச் செயலாளா் ஜெயநாச்சியா, திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் பேச்சித்துரை, இளைஞா் அணி தலைவா் லிங்கராஜ், பொதுச் செயலா்கள் முருகராஜ், மனோகரன், செயலா்கள் இசக்கி பாண்டி, சுரேஷ், கதிரேசன், பொருளாளா் மகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் காளிமுத்து உள்ளிட்ட பாஜகவினா் அங்கு திரண்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேனா் கிழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை உடனடியாக கண்டறிந்து அவா்கள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருச்செந்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி தங்கராஜ், ஆத்தூா் பிரபாகரன் ஆகியோா் பாஜகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வுசெய்து மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, பாஜகவினா் கலைந்து சென்றனா்.