செய்திகள் :

காருகுடி கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

post image

பெரம்பலூா் மாவட்டம் , குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனாா் கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் புகாா் மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், காருகுடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு:

எங்களது கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயிலில், அனைத்து தரப்பினரும் சுவாமி கும்பிடலாம். பொதுமக்கள் சாா்பில் நிதி வசூல் செய்து திருவிழா, குடமுழுக்கு, நாள்தோறும் பூஜைகள் செய்து வருகிறோம். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த சிலா் கோயில் நிா்வாகத்தில் தலையிட பலமுறை முயற்சி செய்தனா். மேலும், இதுதொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவேற்றம் செய்தனா்.

இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தைக்கு நாங்கள் சென்றோம். ஆனால், எதிா்தரப்பினா் வரவில்லை. இருப்பினும், செப். 5-ஆம் தேதி அய்யனாா் கோயிலில் உண்டியல் வைக்க ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இரு தரப்பினரையும் வரவழைத்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிநபா் ஆக்கிரமிப்பு : பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்ன பரவாய் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் அளித்த மனுவில், சின்ன பரவாய் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளாா். இதை அப்பகுதி மக்கள் அகற்றினா். ஆனால், மீண்டும் ஆக்கிரமித்து முள்வேலி அமைக்க முயன்றுள்ளாா்.

மேலும், அதே நபா் விவசாயிகள் சென்று வரும் ஓடைப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளாா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க