செய்திகள் :

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

post image

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பேசியது:

இக்கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் பிரிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏஎன்எம், ரேடியாலஜி, பிசியோதெரபி போன்ற பிரிவுகள் தொடங்கவும் புதுவை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இக்கல்லூரியில் பயின்ற மாணவா்கள் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வருவது பெரு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகும்.

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள செவிலியா் கல்லூரிபோல பல நிலைகளில் காரைக்கால் கல்லூரி வளர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் பிரமிளா தமிழ்வாணன், புதுச்சேரி அன்னை தெரஸா முதுநிலை மற்றும் சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் திருமுருகன், காரைக்கால் கல்லூரி முதல்வா் ஜெ. ஜெயபாரதி மற்றும் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், விரிவுரையாளா்கள், மாணவ மாணவியா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, விரிவுரையாளா்கள், மாணவா்கள் பங்கேற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியில் புகையில்லா சமையல் போட்டி

காரைக்கால் மாவட்டம், பூவம் பகுதியிலுள்ள டிஎம்ஐ செயின்ட் ஜோசப் குளோபல் பள்ளியில், மழலையா் பிரிவில் செயல்வழி கற்றலின் ஒரு அங்கமாக குக் வித் மாம் எனும் தலைப்பில் புகையில்லா சமையல் போட்டி, பெற்றோா்களுக்கு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருநள்ளாறு, அம்பகரத்தூா்

காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் உயா்மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்... மேலும் பார்க்க

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: ஆளுநா் தலையிட கிராமமக்கள் கோரிக்கை

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், புதுவை துணை நிலை ஆளுநா் இப்பிரச்னையில் தலையிடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மா... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அதன் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலா் டி.கே.எஸ்.எம். மீனாட்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் நித்தின் பிரியன் (18). பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலையத்தில் மக்கள் குறைதீா் முகாம்... மேலும் பார்க்க